யாழ்.ஊரெழு பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் இளைஞன் ஒருவன் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஊரெழு பகுதியில் பொலிஸ் சுற்றிவளைப்பில் இளைஞன் ஒருவன் கைது..

யாழ்.ஊரெழு பகுதியில் 250 மாவா சரைகளுடன் 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா சரைகள் வழங்கப்படுவதாக கோப்பாய் பெலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸார் ஊரெழுப் பகுதியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் மாவா சரைகளுடன் கைது செய்தனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு