யாழ்.சாவகச்சேரியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் கைகுண்டு மீட்பு!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சேரியில் வைத்தியர் ஒருவரின் வீட்டில் கைகுண்டு மீட்பு!

யாழ்.சாவகச்சேரி - சங்கத்தானை பகுதியில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான வீட்டு வளவில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. 

வைத்தியர் தனது வீட்டு வளவை சுத்தம் செய்து கொண்டிருந்த பொழுது கைக்குண்டை கண்டெடுத்துள்ளார்.  

இதையடுத்து வைத்தியர் கைக்குண்டை எடுத்துக்கொண்டு சாவகச்சேரி தம்பதோட்ட இராணுவ முகாமிற்கு சென்று அந்த கைக்குண்டை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார். 

இது தொடர்பாக இராணுவத்தினரால்  சாவகச்சேரி பொலிசாருக்கு அறிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு