யாழ்.நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சம்பவம் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர்...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவு கூட்டுப் படுகொலை சம்பவம் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது - பொலிஸ் ஊடக பேச்சாளர்...

யாழ்.நெடுந்தீவில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய 51 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டன் பிரஜாவுரிமை பெற்ற வேலாயுதம்பிள்ளை நாகேந்திர ரத்தினம் (வயது 78) யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களான நாகநதி பாலசிங்கம் (வயது 82) , 

பாலசிங்கம் கண்மணிப்பிள்ளை (வயது 76) , கார்த்திகேசு நாகேஸ்வரி (வயது 83) , மகாதேவன் (வயது 75) என்பவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை சம்பவத்தில் படுகாயமடைந்த 100 வயதான மூதாட்டி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு