யாழ்.நகர் பழக்கடை வியாபாரிகள் 3 பேர் போதை ஊசிகளுடன் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகர் பழக்கடை வியாபாரிகள் 3 பேர் போதை ஊசிகளுடன் கைது!

யாழ்.நல்லுார் - அரசடி பகுதியில் போதை ஊசிகளுடன் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து போதை ஊசிகள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , கைதான மூவரும் நகர் பகுதியில் பழக்கடைகளில் பழ விற்பனையில் ஈடுபடும் நபர்கள் எனவும் 

அவர்கள் மூவரும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து 

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு