யாழ்.நெடுந்தீவில் பயங்கரம்!! அதிகாலையில் வீடு புகுந்து 5 பேர் வெட்டிக்கொலை, ஒருவர் குற்றுயிராய் மீட்பு...

ஆசிரியர் - Editor I
யாழ்.நெடுந்தீவில் பயங்கரம்!! அதிகாலையில் வீடு புகுந்து 5 பேர் வெட்டிக்கொலை, ஒருவர் குற்றுயிராய் மீட்பு...

யாழ்.நெடுந்தீவில் 5 பேர் இன்று அதிகாலை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இறங்குதுறையை அண்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கியிருந்தவர்கள் மீதே இனந் தெரியாதோர் இந்தக் கொலையை புரிந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்த மூவர் என ஆறுபேர் தங்கியிருந்த சமயம் 

இக்கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது வெளிநாட்டில் இருந்து வருகை தந்த ஒருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு