யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகளை களவாடிய கும்பலை சேர்ந்தவர் உட்பட இருவர் சிக்கினர்!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகளை களவாடிய கும்பலை சேர்ந்தவர் உட்பட இருவர் சிக்கினர்!

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளில் இறைச்சிக்காக மாடுகளை களவாடிய கும்பலை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்துள்ளனர். 

திருட்டுக் கும்பலிடம் இறைச்சியை வாங்கி விற்பனை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கூறிய பொலிஸார், மேலும் நால்வர் தேடப்படுவதாகக் குறிப்பிட்டனர்.

வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த 24, 26 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர், வட்டுக்கோட்டை, அளவெட்டி, தெல்லிப்பழை, வடமராட்சி உ

ள்ளிட்ட பிரதேசங்களில் 25 இற்கும் மேற்பட்ட மாடுகளைத் திருடு இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

5 பேர் கொண்ட கும்பல், பகலில் மோட்டார் சைக்கிளில் சென்று மாடுகளை நோட்டுமிட்டு வந்து இரவில் வாகனத்தில் சென்று இரும்புச் சங்கிலி போட்டு மாடுகளை ஏற்றிவந்து 

கப்பூது வெளியில் வைத்து இறைச்சியாக்கி விற்பனை செய்துள்ளது.இறைச்சியடிக்கப்பட்ட மாடுகளின் எச்சங்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. 

திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம், இரும்புச் சங்கிலி மற்றும் வாள் சந்தேக நபரிடம் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு