யாழ்.நல்லுார் விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.நல்லுார் விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கணவன், மனைவி உட்பட 3 பேர் கைது...

யாழ்.நல்லுார் பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மீதும், அதன் உரிமையாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நல்லூர் பகுதியில் உள்ள விடுதிக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 03 பெண்கள் உள்ளிட்ட 07 பேர் கொண்ட கும்பல் கார் ஒன்றில் வந்து இறங்கி , 

விடுதி மீது தாக்குதல் மேற்கொண்டு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தால் பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதமாக்கப்பட்டு உள்ளதாகவும், கண்காணிப்பு கமரா கட்டுப்பாட்டு தொகுதியை உடைத்து தம்முடன் எடுத்து சென்றுள்ளதாகவும் விடுதி உரிமையாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த விடுதியில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சியொன்றின் அலுவலகமொன்று இயங்குவதுடன் உரிமையாளர் அரசியல் கட்சியின் அமைப்பாளராகவும் செயற்படுகிறார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு