யாழ்.கைதடி பகுதியில் கோர விபத்து!! பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி...

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடி பகுதியில் கோர விபத்து!! பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி...

யாழ்.கைதடி பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தல் பொலிஸ் அதிகாரி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான குருநாகலை சேர்ந்த ஆர்.எம்.குணரத்ன (வயது54) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இ.போ.ச பேருந்தின் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த பொலிஸார் அதிகாரி பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில், 

எதிர் திசையில் வந்த லொறி பொலிஸ் அதிகாரி மீது மோதியதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக சாவகச்சோி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

இதேவேளை பேருந்து சாரதி மற்றும் லொறி சாரதி ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு