யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் மீது வெடிபொருளை எறிந்து வெடிக்கவைத்த இனந்தொியாத நபர்கள்! பொலிஸார் விசாரணை..

ஆசிரியர் - Editor I
யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் மீது வெடிபொருளை எறிந்து வெடிக்கவைத்த இனந்தொியாத நபர்கள்! பொலிஸார் விசாரணை..

யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனந்தொியாத நபர்கள் வெடிபொருள் ஒன்றை எறிந்து வெடிக்க வைத்துள்ளனர். 

நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வெடி குண்டு வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடித்துள்ளது. 

அதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை நடத்தினர்.  

குறித்த வெடி குண்டு உள்ளூர் தயாரிப்பாக இருக்கலாம் என்றும் , அது பெரியளவிலான சேதங்களை விளைவிக்க கூடியவாறு காணப்படவில்லை எனவும் 

பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் அடிப்படையில் தெரிய வருகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு