எதிர்க்கட்சிகளின் ஒழுங்கமைப்பில் அரசுக்கு எதிரான பேரணி நல்லுாரில் இருந்து ஆரம்பம்..

ஆசிரியர் - Editor I
எதிர்க்கட்சிகளின் ஒழுங்கமைப்பில் அரசுக்கு எதிரான பேரணி நல்லுாரில் இருந்து ஆரம்பம்..

எதிர்க்கட்சிகளின் ஒழுங்கமைப்பில் 5 பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு பயணமாகும் அரசுக்கு எதிரான பேரணி யாழ்.நல்லுார் கோவிலில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. 

நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஐக்கிய மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திர பிரகாஷ் உட்பட 

கட்சியின் அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நடைபெறவுள்ள குறித்த யாத்திரை யாழ்ப்பாணம், மன்னார், காத்தான்குடி, கண்டி 

மற்றும் கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களில் இருந்து ‘பாசத்திற்கான யாத்திரை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையில் நாட்டின் 5 இடங்களில் இருந்து நாளை ஆரம்பமாகும் ‘பாசத்திற்கான யாத்திரை’ 21 ஆம் திகதி கொழும்பை சென்றடையவுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு