கொடுத்த முறைப்பாட்டைக் கண்டுகொள்வார் இல்லை! யாழ்.மாநகரசபை முன்பாக பொதுமகன் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
கொடுத்த முறைப்பாட்டைக் கண்டுகொள்வார் இல்லை! யாழ்.மாநகரசபை முன்பாக பொதுமகன் போராட்டம்..

கொடுத்த முறைப்பாட்டுக்கு நடவடிக்கை இல்லை கூறி யாழ்.மாநகரசபைக்கு முன்பாக பொதுமகன் ஒருவர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை நடத்திவருகின்றார். 

யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட பருத்தித்துறை வீதியில் வசிக்கும் குறித்த நபரின் வீட்டிற்கு அருகில் அனுமதி பெறப்படாத கட்டிடம் ஒன்றும் உள்ளதாகவும் 

அந்த கட்டிடத்தின் கழிவு நீர் தன்னுடைய வீட்டிற்குள் வருவதாகவும். இதனை மாநகரசபையிடம் பல்வேறு தடவைகள் முறையிட்டும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் 

இதனாலேயே ஒருநாள் அடையாள உண்ணாவிரத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார். குறித்த நபருடன் யாழ்.மாநகரசபை அதிகாரிகள் கலந்தாலோசித்தபோதும் 

குறித்த நபர் தொடர்சியாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு