யாழ்.கொட்டடி பிள்ளையார் கோவிலின் முன்னால் உண்டியலுடன் உள்ள பிள்ளையார் சிலையை உடைக்க முயற்சி..

ஆசிரியர் - Editor I
யாழ்.கொட்டடி பிள்ளையார் கோவிலின் முன்னால் உண்டியலுடன் உள்ள பிள்ளையார் சிலையை உடைக்க முயற்சி..

யாழ்.பருத்தித்துறை - கொட்டடி பிள்ளையார் கோவிலின் முன்னால் உண்டியலுடன் அமைக்கப்பட்டுள்ள பிள்ளையார் சிலை அடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. 

கொட்டடி பிள்ளையார் கோயில் ஆலயத்தின் முகப்பில் உள்ள பிள்ளையார் சிலையே சில விசமிகளால் உடைத்து எடுத்துச் செல்வதற்கான முயற்சி இடம்பெற்றிருக்கிறது.

பிள்ளையார் சிலை உண்டியலுடன் காணப்படுகிறது. இந்நிலையில் சம்பவதினமான நேற்றுமுன்தினம் காலை அடியவர் ஒருவர் குறித்த சிலையை வழிபட்டபோது 

பிள்ளையார் சிலையின் கால் பகுதி உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்துள்ளார்.இந்த சிலையும் அமைக்கப்பட்டிருக்கும் பீடமும் கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளதால் 

சிலையை அப்புறப்படுத்தும் முயற்சி கைகூடவில்லை என அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு