யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றகோரி முறைப்பாடு கொடுத்தவர் யாழ்ப்பாணத்திலிருந்து விரைவில் வெளியேறுவார்...

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றகோரி முறைப்பாடு கொடுத்தவர் யாழ்ப்பாணத்திலிருந்து விரைவில் வெளியேறுவார்...

பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றக்கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியவர் விரைவில் யாழ்ப்பாணத்திலிருந்து வௌியேறுவார் என நாடாளுமன்ற உறுப்பினர், நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தொிவித்தள்ளார். இதன்போது மேலும் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அன்னையில் அமைந்துள்ள நாகபூசணி அம்மன் உரிய அனுமதிகள் பெறாது அமைக்கப்பட்டதாக தெரிவித்து ஒருவர் முறைப்படி வழங்கியதாக அறிகிறேன். 

அவரது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றது பிரச்சினை இல்லை மாவட்டத்தில் உரிய முறையில் அனுமதி பெற்றா வழிபாட்டு இடங்கள் அமைக்கப்படுகின்று என்பதை பொலிசாரிடம் கேட்க விரும்புகிறேன். 

சட்டம் யாவருக்கும் சமன் சட்டத்தை உரிய முறையில் பொலிசார் நடைமுறைப்படுத்த வேண்டும். முறைப்பாடு வழங்கியவர் யார் என்பது இதுவரை வெளி வராத நிலையில் யாழ்ப்பாணத்தை விட்டு விரைவில் வெளியேறுவார்போல தெரிகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு