யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்ற பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு! ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா...

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்ற பொலிஸார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு! ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீகாந்தா...

யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றக்கோரி யாழ்.நீதிவான் நீதிமன்றில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இந்து அமைப்புக்கள் சார்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா, 

இந்து அமைப்புக்கள் சார்பில் அகில இலங்கை இந்து மாமன்றம், நல்லூர் ஆதினம் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகளும் முன்னிலையாகினர்.

குறித்த வழக்கு தொடர்பில் பொலிஸாரின் வழக்கிடு தகைமை மற்றும் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் தொடர்பில் கேள்விக்குட்படுத்தி இருவரும் 

நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.எழுத்துமூல சமர்ப்பணங்களிற்காக வழக்கு எதிர்வரும் 04.05.2023 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு