காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய இளைஞர் கைது

ஆசிரியர் - Editor II
காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய இளைஞர் கைது

இளைஞர் ஒருவர் தனது காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசா மாநிலம் மதனகுடாவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையத்தில் தங்கி அங்குள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 

அதே போல் ராஜஸ்தான் மாநிலம் தகி பகுதியை சேர்ந்த இந்திரா பைரவா மகன் ஆகாஷ் பைரவா (வயது 21) என்பவர் பல்லடம், தாராபுரம் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வருகிறார். 

இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆகாஷ் பைரவாவின் நண்பரான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரேந்தர் சிங் (வயது 31) அவினாசியை அடுத்த நம்பியம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்தார்.

கடந்த 16 ஆம் திகதி ஆகாஷ் பைரவா தனது காதலியை மோட்டார்சைக்கிளில் வெளியே அழைத்து சென்றார். திருப்பூர் மாநகரில் உள்ள ஹோட்டல், பூங்காவுக்கு சென்றுள்ளனர். பின்னர் காதலியை அழைத்துக்கொண்டு அவினாசியில் உள்ள தனது நண்பர் வீரேந்தர்சிங் வீட்டிற்கு சென்றார். 

அங்கு காதலியுடன் ஆகாஷ் பைரவா உல்லாசமாக இருந்தார். இதனை மறைந்திருந்து பார்த்த வீரேந்தர்சிங், நண்பனின் காதலியை அடைய நினைத்துள்ளார். இதற்காக தனது நண்பன் ஆகாஷ் பைரவாவிடம் தனது ஆசையை கூறியுள்ளார். இதற்கு அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். 

இதையடுத்து ஆகாஷ் பைரவா தனது காதலியிடம் கடைக்கு சென்று வருவதாக கூறி அங்கிருந்து சென்றார். இந்த நேரத்தில் வீரேந்தர்சிங், தனது நண்பனின் காதலியை அச்சுறுத்தி கற்பழித்துள்ளார்.

இந்தநிலையில் அங்கு வந்த ஆகாஷ் பைரவா தனது காதலியை மோட்டார்சைக்கிளில் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார். மோட்டார் சைக்கிளில் செல்லும் போது அந்த பெண், ஆகாஷ் பைரவாவிடம் ,உனது நண்பன் என்னை கற்பழித்ததற்கு நீதான் உடந்தையாக இருந்துள்ளாய் என்று கூறியுள்ளார். 

இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மோட்டார்சைக்கிளை நிறுத்தும்படி காதலி கூறினார். ஆனால் ஆகாஷ் பைரவா மோட்டார் சைக்கிளை நிறுத்தாததால் அந்த பெண் பிரேக் பிடித்துள்ளார். 

இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அந்த பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் திருப்பூர் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு பொலிஸாரிடம் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆகாஷ் பைரவா மற்றும் அவரது நண்பர் வீரேந்தர் சிங் ஆகியோர் மீது பல்லடம் பொலிஸார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். 

பின்னர் 2 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு