யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் வீட்டு முற்றத்தில் தனக்கு தானே தீ மூட்டிய பெண் உயிரிழந்துள்ளார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.வலி,வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் வீட்டு முற்றத்தில் தனக்கு தானே தீ மூட்டிய பெண் உயிரிழந்துள்ளார்..

யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளரின் வீட்டு முற்றத்தில் தனக்கு தானே தீ மூட்டியதுடன், காப்பாற்றியபோது கிணற்றில் குதித்த பெண் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஏழாலை பகுதியில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்ற குறித்த பெண், 

வீட்டு முற்றத்தில் தனக்கு தானே தீ மூட்டி உயிர்மாய்க்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த வீட்டில் இருந்தோர் தீயினை அணைத்து காப்பாற்றிய போதிலும் , அவர் கிணற்றினுள் குதித்துள்ளார். கிணற்றில் இருந்து காப்பாற்றி தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்நிலையில் சிகிச்சை பெற்று அவர்  சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு