யாழ்.குருநகர் இராணுவ முகாமில் பணியாற்றிய 23 வயதான பெண் இராணுவ சிப்பாய் டெங்கு காய்சலால் பலி!

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகர் இராணுவ முகாமில் பணியாற்றிய 23 வயதான பெண் இராணுவ சிப்பாய் டெங்கு காய்சலால் பலி!

யாழ்.குருநகர் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் பணியாற்றிய 23 வயதான பெண் இராணுவ சிப்பாய் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார். 

கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் பலாலி இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அவருக்கு டெங்கு தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டதனால் கடந்த7ஆம் திகதி யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

கொழும்பைச் சேர்ந்த கே.எம் .கே .செவ்வந்தி என்ற பெண் சிப்பாயே உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு