கயிறிழுத்தல் போட்டியில் சாதித்து கிண்ணம் வென்றது அரியாலை ஐக்கிய கழக அணி

ஆசிரியர் - Editor II
கயிறிழுத்தல் போட்டியில் சாதித்து கிண்ணம் வென்றது அரியாலை ஐக்கிய கழக அணி

யாழ்.மாவட்ட இராணுவ படைத்தலைமயகம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை நடாத்திய புதவருட விளையாட்டு நிகழ்வு கயிறிழுத்தல் போட்டியில் அரியாலை ஐக்கிய கழக அணி சம்பியனானது.

அரியாலை ஐக்கிய கழக அணி முதல் சுற்றில் நவாலி அணியை எதிர் கொண்டு (2-0) என்ற அடிப்படையிலும், இரண்டாம் சுற்றில் தெல்லிப்பளை கணேசன் டீ அணியை எதிர் கொண்டு (2-0) என்ற அடிப்படையில் பெற்று பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்படி இறுதிப்போட்டியில் அரியாலை ஐக்கிய கழக அணி தெல்லிப்பளை கணேசன் யு அணியை எதிர் கொண்டு (2-0) என்ற அடிப்படையில் வீழ்த்தி முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

அரியாலை ஐக்கிய கழக அணி நடைபெற்ற மூன்று போட்டியிலும் 2-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு