யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்ற பொலிஸார் பிரயத்தனம், குறிகட்டுவானில் அரச மரத்தை நட்ட கடற்படை...

ஆசிரியர் - Editor I
யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்ட நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்ற பொலிஸார் பிரயத்தனம், குறிகட்டுவானில் அரச மரத்தை நட்ட கடற்படை...

யாழ்.பண்ணை சுற்றுவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மன் சொரூபத்தை அகற்றுவதற்கு பொலிஸார் பிரயத்தனம் எடுத்துவருகின்றனர். 

நயினாதீவு விகாராதிபதியின் தலையீட்டினாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தை பிரதிபலிக்கும் வகையில் யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 

நாகபூசணி அம்மன் திருவுருவச் சிலைக்கு தமிழ் புதுவருடப் பிறப்பில் பால் அபிசேகம் உருத்திர சேனா அமைப்பினால் செய்யப்பட்டது.

இந்த நிலையில் உருத்திர சேனா அமைப்பின் பிரதிநிதிகள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு 3 மணிநேரம் தீவிர விசாரைணக்கு உள்படுத்தப்பட்டனர். 

உருவச் சிலையை அமைத்தவர்கள் தொடர்பில் தமக்கு தகவல் தெரியாது என்றும் தாம் பால் அபிசேகம் செய்ததாகவும் உருத்திரசேனா அமைப்பினர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

எந்தவொரு அனுமதியுமின்றி அமைக்கப்பட்ட நாகபூசனி அம்மனின் சிலையை அகற்ற தீவிர நடவடிக்கையில் யாழ்ப்பாணம் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறிகாட்டுவான் இறங்குதுறையில் வைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருந்த அரச மரத்தை கடற்படையினர் திறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு