பேருந்து நடத்துனர் வடிகானிலிருந்து சடலமாக மீட்பு!

ஆசிரியர் - Editor I
பேருந்து நடத்துனர் வடிகானிலிருந்து சடலமாக மீட்பு!

நீர் வழிந்தோடும் வடிகானில் இருந்து பேருந்து நடத்துனர் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் கொட்டபொல பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவர் நில்நதிகம பிரதேசத்தில் வசிக்கும் 29 வயதுடைய தில்ஷான் சதுரங்க என்ற திருமணமானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தெனியாயவிலிருந்து அக்குரஸ்ஸ நோக்கிச் செல்லும் தனியார் பஸ் ஒன்றின் நடத்துனராக இவர் பணிபுரிந்து வந்துள்ளார்.இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு