யாழ்.புத்துார் - ஆவரங்கால் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றுக்குள் புகுந்த பாரவூர்தி, இருவர் காயம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.புத்துார் - ஆவரங்கால் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றுக்குள் புகுந்த பாரவூர்தி, இருவர் காயம்..

யாழ்.புத்துார் ஆவரங்கால் பகுதியில் கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பாரவூர்தி கட்டுப்பாட்டை இழந்து கடை ஒன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்திருக்கின்றனர். 

யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென காற்று போனதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து 

அருகே உள்ள டயர் கடை மற்றும் தேங்காய் விற்பனை செய்யும் கடை ஆகியவற்றின் தொட்டிகள் மதிச்சுவர்கள் என்பவற்றை மோதித் தள்ளி கண்டர் வாகனமும் முற்றாக செய்தமடைந்தது. 

இதன்போது குறித்த வாகனத்தில் பயணம் செய்த சாரதியின் உதவியாளர்கள் இருவர் கைகள் மற்றும் தலைகளில் காயங்களுக்குள்ளாகி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கடையினுள் புகுந்த வாகனத்தினை பிரதேசவாசிகள் மீட்டனர். குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு