5 மாத கர்ப்பவதியான காதல் மனைவியை கட்டுத் துவக்கால் சுட்ட கணவன் கைது! வடக்கில் இடம்பெற்ற சம்பவம்...

ஆசிரியர் - Editor I
5 மாத கர்ப்பவதியான காதல் மனைவியை கட்டுத் துவக்கால் சுட்ட கணவன் கைது! வடக்கில் இடம்பெற்ற சம்பவம்...

கிளிநொச்சி - கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் 5 மாத கர்ப்பவதியான தனது காதல் மனைவியை கட்டுத்துவக்கால் சுட்ட கணவன் அக்கராயன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இச் சம்பவம் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்போது காயமடைந்த கர்ப்பிணி உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். 

கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 40 வயதுடைய கர்ப்பிணி மனைவியின் கணவர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுத் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது. தி. திபாகரன், M.A.

மேலும் சங்கதிக்கு