யாழ்.நகரிலுள்ள கருவாட்டு கடைகளில் யாழ்.மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரிலுள்ள கருவாட்டு கடைகளில் யாழ்.மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை!

யாழ்.மாநகரில் கருவாட்டு கடை நடத்தும் வியாபாரிகளை எச்சரித்துள்ள யாழ்.மாநகரசபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உரிய காலத்திற்குள் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும்படி அறிவுறுத்தியுள்ளனர். 

குறித்த கால பகுதிக்குள் குறைகளை நிவர்த்தி செய்யாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள கருவாட்டு கடைகள் 

யாழ்.மாநகர பொது சுகாதார பரிசோதகர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன்போது , தெருவோரம் தூசுக்கள், மாசுக்களால் மாசடையக்கூடிய வகையில் கருவாடுகள் வைத்திருந்த கடை உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டனர். 

தெருவோரம் கருவாடுகள் வைத்து விற்பனை செய்வதாயின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்வதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அத்துடன் கருவாடுகளை தூசு படியும் வகையிலும், 

ழுக்கான கறள் படிந்த கம்பிகளிலும் குத்தி தொங்கவிடப்பட்டிருந்த கடை உரிமையாளர்களுக்கும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. கருவாடுகள் அனைத்தையும் பொலித்தீனால் மூடி தூசுக்கள் படாதவாறு காட்சிப்படுத்துமாறும் 

பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டது. மேற்படி குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு இரண்டு வாரகால அவகாசம் வழங்கப்பட்டதுடன், கால அவகாசத்தின் பின்னரும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யாத வர்த்தகர்களிற்கு

எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்களால் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு