யாழ்.பொம்மை வெளியில் போதைப் பொருள் வியாபாரியான 32 வயது பெண் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.பொம்மை வெளியில் போதைப் பொருள் வியாபாரியான 32 வயது பெண் கைது!

யாழ்.ஓட்டுமடம் - பொம்மைவெளி பகுதியில் நீண்ட நாட்களாக தேடப்பட்டுவந்த போதைப் பொருள் வியாபாரியான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.பொம்மைவெளி 5ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் கூறினர். 

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு