யாழ்.இருபாலை சட்டவிரோத சிறுவர் இல்லத்தின் தலைமை போதகருக்கு பிணை!

ஆசிரியர் - Editor I
யாழ்.இருபாலை சட்டவிரோத சிறுவர் இல்லத்தின் தலைமை போதகருக்கு பிணை!

யாழ்.இருபாலை பகுதியில் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட சட்டவிரோத சிறுவர் இல்லத்தின் தலைமை போதகர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸாரால் அவர் தேடப்பட்டுவந்தார். 

இந்நிலையில் அவர் கொழும்பு - கல்கிசையில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்ற உத்தரவு கல்கிசை பொலிஸாருக்கு அனுப்பபட்டு அவர் கல்கிசை பொலிஸாரினால் கல்கிசை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். 

எனினும் நீதிமன்றத்தில் பிணை வழங்க பொலிஸார் ஆட்சேபனை தொிவிக்காததால் அவருக்கு பிணை வழங்கிய நீதிமன்றம் எதிர்வரும் எதிர்வரும் 21ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடக்கும் நீதிமன்ற விசாரணையில் ஆஜராக மன்று உத்தரவிட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு