வன்புணர்வு செய்த பின் ஆசிட் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண்!! -கொடூர இளைஞர் கைது-

ஆசிரியர் - Editor II
வன்புணர்வு செய்த பின் ஆசிட் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட பெண்!! -கொடூர இளைஞர் கைது-

இந்தியாவின் மாநிலம் ராஜஸ்தானில் பெண்ணொருவரை வன்புணர்வு செய்த பின், அவரை கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள பலோத்ராவில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வன்புணர்வு செய்து விட்டு உடலில் தீ வைத்து விட்டு சென்றுள்ளார்.

அரைவாசி எரிந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண் பின் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 30 வயதான அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

வீட்டில் தனியே இருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சக்கூர் கான் என்பவர் வீட்டுக்குள் நுழைந்து வன்புணர்வு செய்துள்ளார். பின் அந்த பெண் மீது ஆசிட் போன்ற திரவத்தை ஊற்றி தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.

பெண்ணின் கணவர் கொடுத்த முறைப்பாட்டின் பேரில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், சக்கூர் கான் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 இலட்சம் நிதியுதவி செய்வதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அவர்கள் அதை மறுத்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மதன் பிரஜாபத் தெரிவித்துள்ளார்.

அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரவேண்டும் என பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜோத்பூர் வைத்தியச்ந் பெண்ணின் குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற பார்மர் மாவட்ட ஆட்சியர் அஷ்வின் பன்வார், அவர்கள் சொந்த ஊரான பலோத்ராவுக்குத் திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன என கூறியுள்ளார்.   

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு