யாழ்.திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் இரு மாணவர்களை காணவில்லை!

ஆசிரியர் - Editor I
யாழ்.திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்தில் இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புபட்டதாக கூறப்படும் இரு மாணவர்களை காணவில்லை!

யாழ்.திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவ சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்ததாக நிர்வாகத்தால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்டு முறைப்பாடு வழங்கப்பட்ட இரு மாணவர்கள் அன்று தொடக்கம் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

அதேவேளை நேற்றுமுன்தினம் (08) வரையில் குறித்த இரு சிறுவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.கடந்த 27ஆம் திகதி சிறுவர் இல்ல விடுதி முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார். 

இதனையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரது பெயர்களைக் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு சிறுவர்களில் இருவரே கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர். அதேவேளை சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு