யாழ்.இளவாலையில் காரில் பயணித்தவரை வழிமறித்து சரமாரி வாள்வெட்டு! இருவர் கைது...

ஆசிரியர் - Editor I
யாழ்.இளவாலையில் காரில் பயணித்தவரை வழிமறித்து சரமாரி வாள்வெட்டு! இருவர் கைது...

யாழ்.இளவாலை பகுதியில் கார் ஒன்றில் பயணித்தவரை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது. 

யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பண்ணாகம் பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர்,

படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த இளவாலை பொலிஸார் 25 மற்றும் 30 வயதுடைய இருவரை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு