யாழ்.குருநகரில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது! மற்றொருவர் யாழ்.சிறையில்..

ஆசிரியர் - Editor I
யாழ்.குருநகரில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது! மற்றொருவர் யாழ்.சிறையில்..

யாழ்.குருநகர் பகுதியில் 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். 

யாழ்.குருநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய 19 வயது முதல் 26 வயதுக்குட்பட்டவர்களே 14 வயதுச் சிறுமியை 

தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தியமை நேற்றுமுன்தினம் பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் தெரியவந்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த வேளைகளிலேயே சந்தேக நபர்கள் இந்ந செயலை செய்துள்ளனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சந்தேக நபர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு