10 வயது சிறுமியைக் கொலை செய்த 11 வயது சிறுவன்!! -காப்பகம் ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்-

ஆசிரியர் - Editor II
10 வயது சிறுமியைக் கொலை செய்த 11 வயது சிறுவன்!! -காப்பகம் ஒன்றில் நடந்த அதிர்ச்சி சம்பவம்-

ஜேர்மன் நாட்டில் உள்ள காப்பகம் ஒன்றில், 11 வயது சிறுவன் ஒருவன் ஒருவர் 10 வயது சிறுமி ஒருவரை கொலை அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளாது.

செவ்வாய்க்கிழமையன்று, அந்நாட்டின் பவேரியா மாகாணத்திலுள்ள, வுன்செடேல்

(Wunsiedel) என்ற இடத்தில் இருந்து இயங்கும் சிறுவர் மற்றும் இளைஞர் காப்பகத்தில், சிறுமி ஒருவர் தனது அறையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கிடைத்துள்ள ஆதாரங்கள் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த ஆதாரங்கள், அதே காப்பகத்தில் தங்கியிருக்கும் 11 வயது சிறுவன் ஒருவனைக் கைகாட்டியுள்ளன.

ஜேர்மன் சட்டப்படி குற்றச்செயலுக்கு பொறுப்பேற்கும் வயது வராததால், அந்தச் சிறுவன் பாதுகாப்பான காப்பகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில், தங்களுடன் தங்கியிருந்த சிறுமி ஒருத்தி கொல்லப்பட்டதால், அந்த காப்பகத்தில் தங்கியிருக்கும் மற்ற சிறுவர் சிறுமியர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.

கடந்த மாதம், லூயிஸ் என்னும் 12 வயது சிறுமியை அவளது சக மாணவிகளான 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு சிறுமிகள் பல முறை குத்திக் கொலை செய்த விடயத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் இந்த செய்தி வெளியாகியுள்ளதால் ஜேர்மனியே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு