யாழ்.சாவகச்சோியில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.சாவகச்சோியில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்தவர் கைது!

யாழ்.சாவகச்சோியில் பொலிஸாருக்கு லஞ்சம் கொடுத்து ஆடுகளை கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டிருக்கின்றார். 

பிரதி பொலிஸ்மா அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் யாழ்ப்பாணமாவட்டத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சோதனையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 

யாழ்.சாவகச்சேரி பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை கடத்திச் சென்ற ஒருவர் வழிமறிக்கப்பட்டுள்ளார். இதன்போது குறித்த நபர் தன்னை சோதனைக்குட்படுத்திய பொலிஸாருக்கு லஞசம் கொடுக்க முயன்றுள்ளார். 

இந்நிலையில் குறித்த நபர் சாவகச்சேரி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு