கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியை! பாடசாலை சென்றபோது நடந்த சம்பவம்..

ஆசிரியர் - Editor I
கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியை! பாடசாலை சென்றபோது நடந்த சம்பவம்..

பாலர் பாடசாலை ஆசிரியையான இளம்பெண் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது கூரிய ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

இந்த சம்பவம் பேராதனை, கொப்பேகடுவ, கினிஹேன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முருதலாவ பகுதியை சேர்ந்த அஞ்சலி சாபா என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாலர் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்குபற்றச் சென்றபோதே அவர் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 

சந்தேகநபர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.சடலம் இலுக்தென்ன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு