யாழ்.மாவட்டத்தில் தேநீர், பால் தேநீர் மற்றும் பரோட்டா விலை 10 ரூபாவினால் குறைப்பு! இன்று தொடக்கம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் தேநீர், பால் தேநீர் மற்றும் பரோட்டா விலை 10 ரூபாவினால் குறைப்பு! இன்று தொடக்கம்..

யாழ்.மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை தொடக்கம் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவக உரிமையாளர்கள் தொிவித்திருப்பதாக யாழ்.வணிகர் கழகம் தொிவித்துள்ளது. 

யாழ்.வணிகர் கழகத்தில் நேற்று மாலை உணவக உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு உணவு நிலையங்களுக்கு ஏற்ப விலைகளில் வேறுபாடு காணப்படுவதால் 

அந்தந்த விலைகளில் இருந்து 10 ரூபா குறைத்து விற்பனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதுவருடத்துக்கு பின்னர் உணவுப்பொதிகள், வேறு உணவுப்பண்டங்கள் தொடர்பான விலைகள் தொடர்பாக 

முடிவெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு