யாழ்.சுன்னாகம் - ஆலடி பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.சுன்னாகம் - ஆலடி பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினால் ஒருவர் கைது!

யாழ்.சுன்னாகம் - ஆலடி பகுதியில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் 29 வயதான நபர் ஒருவர் சுமார் 36 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராணுவ புலனாய்வு பிரிவினரும், சுன்னாகம் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்த இந்நடவடிக்கையின்போது சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றது. 

கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு குறித்த நபர் நீண்ட காலமாக போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் விடயம் தொடர்பில் இராணுவ புலனாய்வுபிரிவுக்கு கிடைத்த 

இரகசிய தகவலை அடுத்து இன்றைய தினம் போலீசாரிடம் இணைந்து நடாத்திய தேடுதலின் போதே கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு