யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

ஆசிரியர் - Editor I
யாழ்.வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர்கள் கடற்றொழில் அமைச்சரிடம் முன்வைத்துள்ள கோரிக்கை!

யாழ்.வடமராட்சி கிழக்கில் சுருக்குவலை தொழிலை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அதனை தொடர்ச்சியாக மேற்கொள்ளவேண்டும். என  வடமராட்சி வடக்கு கடற் தொழிலாளர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. 

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர். சுருக்கு வலைக்கு அனுமதி வழங்கப்பட்ட இரண்டே முக்கால் கண் கொண்ட வலையினை பயன்படுத்தாமல் 

தற்கு குறைவான கண்கொண்ட வலைகளை பயன்படுத்தி சுருக்கு வலைத் தொழில் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அதிகளவிலான சிறிய மீன்கள் குறித்த வலைகளில் அகப்படுவதனால் பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு தொழில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாது சுருக்கு வலைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் வெளிச்சம் பாச்சி மீன்பிடித்தல், டைனமற் அடித்தல் காரணமாக கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைத் தன்மை அழிவடைவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அண்மையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் 

கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட கலந்துரையாடலின் பின்னர் சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் டாக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சரின் பணிபுரைக்கு அமைய 70வீதமான சட்ட விரோத சுருக்குவலைத் தொழில்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளமைக்கு சங்கங்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆகவே வடமராட்சி வடக்கு வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளில் இடம்பெறும் 

சட்டவிரோத சுருக்கு வலைத் தொழிலை தொடர்ச்சியாக கட்டுப்படுத்துவதற்கு அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை முன்வைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு