மாணவனுக்கு சரீர தண்டணை வழங்கியது சட்டம் மற்றும் மாணவர் நலனுக்கு முரணானது! ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கு சென்றது மன வருத்தமாம் - பிரபல பாடசாலை அதிபர் விளக்கம்...

ஆசிரியர் - Editor I
மாணவனுக்கு சரீர தண்டணை வழங்கியது சட்டம் மற்றும் மாணவர் நலனுக்கு முரணானது! ஆனால் நீதிமன்ற நடவடிக்கைக்கு சென்றது மன வருத்தமாம் - பிரபல பாடசாலை அதிபர் விளக்கம்...

யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவனுக்கு சரீர தண்டணை வழங்கப்பட்டது சட்டத்திற்கும், மாணவர் நலனுக்கும் முரணாக இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக குறித்த பாசாலையின் அதிபர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தினால் விசாரணை இடம்பெற்றுவருகின்றது. 

யாழ்.போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு மாணவனுக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கேரியிருந்தது. 

இதனடிப்படையில் வழங்கப்பட்ட விளக்கக் கடிதத்தில் குறித்த காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலும் அது தொடர்பில் தாம் எடுத்த நடவடிக்கை தொடர்பிலும் பாடசாலை அதிபரால் விளக்கம் அளிக்கப்பட்டது. 

மேலும் அந்த விளக்கக் கடிதத்தில் மாணவனுக்கு தண்டனை வழங்கிய ஆசிரியர் பகுதித் தலைவராகவும் ஒழுக்காற்று குழு உறுப்பினராகவும் செயல்பட்டுவருவதுடன் கடந்த காலங்களில் தனது கடமைகளை நேர்த்தியாக செய்துள்ளார். 

நடைபெற்ற சம்பவத்தில் மாணவர்களுக்கு சரீரத் தண்டனை வழங்கியமை சட்டத்துக்கு முரணானவும் மாணவர் நலனுக்கு முரணானதாகவும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன் நிலையில் தண்டனை வழங்கிய மாணவனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பகுதித் தலைவர் உப அதிரும் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

எனினும் குறித்த விடயம் சட்ட மீறலாகவும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது பாடசாலைக்கும் ஆசிரியர்களுக்கு மன வருத்தத்தைத் தருகிறது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பகுதித் தலைவரை அழைத்து எந்தக் காரணத்துக்காகவும் மாணவர்களுக்கு சரீரத் தண்டனை வழங்கக்கூடாது 

என தாபன விதிக் கோவையின் பிரமாணத்திற்கு அமைய எச்சரிக்கை செய்யப்பட்டது என பாடசாலை ஆதிபர் விளக்கம் அளித்துள்ளார். குறித்த விளக்கக் கடிதத்தின் பிரதி பணிப்பாளர் தேசிய பாடசாலைகள் பிரிவு,கல்வி அமைச்சு இசுறுபாய பத்திரமுல்லவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு