யாழ்.இருபாலையில் கிறிஸ்த்தவ மத அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்ட சட்டவிரோத சிறுவர் இல்லம் முற்றுகை, 13 சிறுவர்கள் மீட்பு! துன்புறுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.இருபாலையில் கிறிஸ்த்தவ மத அமைப்பு ஒன்றினால் நடத்தப்பட்ட சட்டவிரோத சிறுவர் இல்லம் முற்றுகை, 13 சிறுவர்கள் மீட்பு! துன்புறுத்தப்பட்டதாக விசாரணையில் தகவல்...

யாழ்.இருபாலை பகுதியில் கிறிஸ்த்தவ மத அமைப்பு ஒன்றினால் எந்தவொரு அனுமதியும் இல்லாமல் நடத்தப்பட்டுவந்த சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு 13 சிறுவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்நடத்தை அலுவலர்களினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மீட்கப்பட்ட சிறுவர்கள் மருத்துவ அறிக்கைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.


யாழ்.இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 

கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்று முற்பகல் அங்கு சென்றனர்.

அதன்போது 13 சிறுவர்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு