வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்த 7 தமிழ் கட்சிகள், 22 பொது அமைப்புகள் கூட்டாக முஸ்தீபு..

ஆசிரியர் - Editor I
வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் மக்கள் போராட்டத்தை நடத்த 7 தமிழ் கட்சிகள், 22 பொது அமைப்புகள் கூட்டாக முஸ்தீபு..

வடகிழக்கு மாகாணங்களில் மாபெரும் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு 7 தமிழ் கட்சிகள் மற்றும் 22 பொது அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன. 

நேற்று மாலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், 

தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், 

தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறிகாந்தா , ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவநாதன் நவீந்திரா (வேந்தன்), மத குருமார்கள், 

பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு