வெடுக்குநாறி மலை ஆதிலிங்ககேஷ்வரர் ஆலயத்திற்கு 7 லட்சம் பெறுமதியான சுவாமி விக்கிரகங்களை வழங்கிய சிவபூமி! அரசியல்வாதிகள் வழங்கியதாக நினைக்காதீர்...

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலை ஆதிலிங்ககேஷ்வரர் ஆலயத்திற்கு 7 லட்சம் பெறுமதியான சுவாமி விக்கிரகங்களை வழங்கிய சிவபூமி! அரசியல்வாதிகள் வழங்கியதாக நினைக்காதீர்...

வவுனியா வடக்கு - வெடுக்குநாறி ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் மீள பிரதிஷ்டை செய்வதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் பெறுமதியான சுவாமி விக்கிரகங்களை சிவபூமி அறக்கட்டளை வழங்கியுள்ளாக அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

யாழ்.நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான கலந்துரையாடலிலே அவர் இதனை தொிவித்திருக்கின்றார். அங்கு மேலும் கூறிய அவர், 

அழிக்கப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது.இ தை ஏன் நான் கூறுகிறேன் என்றால் 

பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள் வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற் காகவே கூறுகிறேன் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு