நாவலர் மண்டபத்தில் மீண்டும் நாவலரின் திருவுருவப்படம்..

ஆசிரியர் - Editor I
நாவலர் மண்டபத்தில் மீண்டும் நாவலரின் திருவுருவப்படம்..

யாழ்.நாவலர் கலாச்சார மண்டபத்திலிருந்து அகற்றப்பட்ட நாவலருடைய புகைப்படம் மீண்டும் அதே இடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 

நாவலர் மணி மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த நாவலர் பெருமானின் திருவுருவப்படம் சில வாரங்களுக்கு முன்னர் கழற்றப்பட்டது. 

கழற்றப்பட்ட படம் தேடுவாரற்றுப் போடப்பட்டிருந்த புகைப்படங்களும் வெளியான நிலையில் நாவலரின் உறவினர் ஒருவர் ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டிருந்தார். 

அதுமட்டுமல்லாது கொழும்பு ஆறுமுக நாவலர் சபை மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் ஆகியன யாழ்.மாநகர ஆணையாளரின் இந்த செயற்பாடு தொடர்பில் 

தமது கண்டனங்களையும் வெளியிட்டன. இந்நிலையில் வடமாகாண ஆளுநரின் நடவடிக்கையால் மீண்டும் நாவலர் திருவுருவப்படம் 

உரிய இடத்தில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு