யாழ்.மாநகரை அண்டிய பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி! 15 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு, ஒரு உணவகம் மற்றும் வெதுப்பகத்திற்கு சீல்...

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரை அண்டிய பகுதிகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி! 15 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு, ஒரு உணவகம் மற்றும் வெதுப்பகத்திற்கு சீல்...

யாழ்.மாநகர பொதுச் சுகாதார பிரிவினர் யாழ்.மாநகரை அண்டிய பகுதியில் நடத்திய திடீர் சோதனை நடவடிக்கையின்போது சுகாதார சீர்கேடு மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 15 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர். 

இதன்போது திகதி காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வெளிக்காட்டி வைத்திருந்த 11 பலசரக்கு கடை வர்த்தகர்கள் யாழ்நகர் மற்றும் வண்ணார்பண்ணை பகுதிகளில் பொது சுகாதார பரிசோதகர்களின் பரிசோதனையில் சிக்கினர். அத்துடன் கொழும்புத்துறை பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் மற்றும் 03 உணவகங்களும் பரிசோதனையில் சிக்கின. 

இதனையடுத்து 15 வர்த்தக உரிமையாளர்களிற்கும் எதிராக யாழ் மாநகரசபை பொதுசுகாதார பரிசோதகர்களால் யாழ் மேலதிக நீதவான் நீதிமன்றில் 29.03.2023 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. வழக்குகளை விசாரித்த மேலதிக நீதவான் 400,000/= தண்டம் அறவிட்டதுடன், 

ஓர் வெதுப்பகம் மற்றும் ஓர் உணவகம் என்பவற்றினை சுகாதார சீர்கேடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை சீல் வைத்து மூடுமாறும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கட்டளை இட்டார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களால் குறித்த வெதுப்பகம் மற்றும் உணவகம் என்பன சீல் வைத்து மூடப்பட்டன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு