யாழ்.இடைக்காடு பகுதியில் 24 வயதான இளைஞன் இராணுவ சோதனை நடவடிக்கையில் கைது!

ஆசிரியர் - Editor I
யாழ்.இடைக்காடு பகுதியில் 24 வயதான இளைஞன் இராணுவ சோதனை நடவடிக்கையில் கைது!

யாழ்.இடைக்காடு பகுதியில் கார் ஒன்றில் பெருமளவு போதைப் பொருட்களை கடத்திய யாழ்.கல்வியங்காடு பகுதியை சேர்ந்த இளைஞர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நேற்று(30) மாலை தொண்டைமானாறு இடைக்காட்டு பகுதியில் இருந்து சுன்னாகத்திற்கு போதைப்பொருளை கடத்திச் செல்லும்போது குறித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கல்வியங்காடு பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞர் செலுத்தி வந்த சொகுசு காரும் 18 கிலோகிராம் போதைப்பொருளும் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு