வட்ஸ் அப் மூலம் முகம் தொயாத நபருடன் 15 வயது சிறுமிக்கு காதல், தனியே அழைத்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சிறுமி குற்றச்சாட்டு, சந்தேகநபர் தலைமறைவாம்...

ஆசிரியர் - Editor I
வட்ஸ் அப் மூலம் முகம் தொயாத நபருடன் 15 வயது சிறுமிக்கு காதல், தனியே அழைத்து பாலியல் பலாத்காரம் புரிந்ததாக சிறுமி குற்றச்சாட்டு, சந்தேகநபர் தலைமறைவாம்...

வட்ஸ் அப் மூலம் ஏற்பட்ட காதல் தொடர்பினால் 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது,கண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் அம்பலாந்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் வட்ஸ் அப் மூலம் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது. 

 சிறிது காலம் மேற்படி வட்ஸ் அப் காதல் நீடித்துள்ளது. அண்மையில் மேற்படி சிறுமியை நேரடியாக சந்திக்க வந்த அம்பலாந்தோட்டை நபர் சிறுமியை ஏமாற்றி கண்டி கெட்டம்பே பகுதியில் உள்ள ஒரு உல்லாச விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். 

அங்கு சிறுமியைப் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். பின்னர் அந்நபர் தலைமறைவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து 

ந்தேகநபர் தேடப்பட்டு வருகிறார். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு