யாழ்.பலாலி இராஜராஜேஷ்வரி ஆலயத்திலிருந்த விக்கிரகங்கள் திருட்டு!!

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி இராஜராஜேஷ்வரி ஆலயத்திலிருந்த விக்கிரகங்கள் திருட்டு!!

யாழ்.பலாலியில் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்ட இராஜராஜேஷ்வரி அம்மன் ஆலய விக்கிரகங்கள் சூறையாடப்பட்டுள்ளது. 

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் காணப்பட்ட விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1846 ஆம் ஆண்டு அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. 

அன்றைய காலம் தொடக்கம் உச்சவ காலங்களில் புஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பின்னர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி எமது கிராமத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 

எமது கிராம மக்கள் வெளியேறி யாழ்குடா நாட்டில் உள்ள பல பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர். 

வாழ்ந்து வரும் காலத்தில் 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரனாலும் எமது கிராம மக்களின் முயற்சியினாலும் இந்த ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. 

2002ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் இந்த ஆலயத்துக்கு சென்று வந்த போதும் நல்ல நிலையிலே ஆலயம் இருந்தது. 

ஆலய விக்கிரமங்களும் இருந்தன. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்றபோது விக்கிரகங்கள் எல்லாம் நல்ல நிலையிலே இருந்ததன.

தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றோம். 

வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது? 

என நிர்வாக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? 24 மணி ஆளங்களும் ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ராணுவம் ஈடுபட்டிருக்கின்றபோது நாம் பூஜை வழிபாடுகளுக்கு செல்வதற்கு கூட 

இராணுவத்தின் அனுமதியினை பெற்று செல்கிறோம் இவ்வாறு நிலைமை இருக்கின்ற பொழுது குறித்த விக்கிரகங்கள் படிப்படியாக காணாமல் போனமைக்கான பிரதான காரணம் என்ன இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு