இங்கிலாந்தில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்களால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

ஆசிரியர் - Editor II
இங்கிலாந்தில் வீடொன்றில் நுழைந்த கொள்ளையர்களால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தில் உள்ள வீடொன்றில் கொள்ளையடிக்கச் சென்ற கொள்ளையர்கள் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திங்கட்கிழமை மாலை 5.45 மணியளவில், இங்கிலாந்திலுள்ள சோமர்செட் (Somerset) என்ற இடத்திலுள்ள புரூம்பீல்ட் இல் (Broomfield) வாழ்ந்து வந்த பெண் ஒருவர் வீட்டுக்குள் கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர்.

கொள்ளை முயற்சி நடப்பதாக தகவலறிந்த பொலிசார் உடனடியாக அந்த வீட்டுக்கு விரைந்துள்ளார்கள். அப்போது, அந்த வீட்டில் 80 வயதுகளிலிருக்கும் ஒரு பெண் படுகாயமடைந்து கிடப்பதை அவர்கள் கண்டுள்ளார்கள்.

பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக இரவு 8.40 மணியளவில் புரூம்பீல்ட் என்ற இடத்தில் 30 வயதுகளிலிருக்கும் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதேபோல, சில நாட்களுக்கு முன், சபோல்க் (Suffolk) என்ற இடத்திலும் முகமூடிக் கொள்ளையர்கள் வீடு ஒன்றைக் கொள்ளையடிக்க முயன்றபோது ஜாய் மிடில்டிச் (Joy Middleditch) என்னும் பெண் தாக்கப்பட்டார். அவர் உயிரிழந்ததையடுத்து, அந்த வழக்கும் கொலை வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு