ராகுல் மீது தொடரும் அதிரடி நடவடிக்கைகள்!! -அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேற நோட்டீஸ்-

ஆசிரியர் - Editor II
ராகுல் மீது தொடரும் அதிரடி நடவடிக்கைகள்!! -அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேற நோட்டீஸ்-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அரசாங்கம் ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேறுமாறு மக்களவை வீட்டு வசதி குழு அறித்தல் கடிதம் அனுப்பி உள்ளது. 

ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் அவருக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது

இந்நிலையில், அரசு ஒதுக்கிய பங்களாவில் இருந்து வெளியேறுமாறு அவருக்கு மக்களவை வீட்டு வசதி குழு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி உள்ளது. 

விதிகளின்படி, தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஒரு மாதத்தில் அவர் அரசு பங்களாவில் இருந்து வெளியேற வேண்டும். கடந்த மார்ச் 23 ஆம் திகதி மக்களவை செயலகம் அவரை எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. 

இதனால், எதிர்வரும் ஏப்ரல் 22 ஆம் திகதிக்குள் ராகுல் காந்தி பங்களாவை காலி செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு