யாழ். வயாவிளான் பகுதிக்கு அந்தப் பகுதி மக்களை மட்டும் செல்லுமாறு அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தால் அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி.வடக்கு வயாவிளான் பகுதிக்கு அந்தப் பகுதி மக்களை மட்டும் செல்லுமாறு அச்சுவேலி பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த வயாவிளான் பகுதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
அங்கு, பெரும்பாலான இடங்களில் ‘காணி உரிமையாளர்கள் மட்டும் உள்ளே செல்லுங்கள்’ என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகள் பொலிஸாரால் அங்கு தொங்கவிடப்பட்டுள்ளன.
வேறு நபர்கள் இந்தப் பகுதிக்குள் நுழைந்தால் தேவையற்ற காணிப் பிணக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். எனவே செல்ல வேண்டாம் என பொலிஸாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பகுதிகளில் வெடிபொருள்களை கண்டால், கலோ ட்ரஸ்ட் நிறுவனம் 021222 3779 என்ற இலக்கத்துக்கும், பிராந்திய மிதிவெடி செயற்பாட்டு அலுவலகம் 0212 285415 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகளை ஏற்படுத்தி உடனடியாக அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பி டத்தக்கது.