புலிக்கொடி மற்றும் வெடி பொருட்களுடன் இருவா் கைது..

ஆசிரியர் - Editor I
புலிக்கொடி மற்றும் வெடி பொருட்களுடன் இருவா் கைது..

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் கொடி மற்றும் கிளைமோா் குண்டுகள், கைக்குண்டுகளுடன் பயணித்தவா்களை விசேட அதிரடிப்படையினா் சுற்றிவளைத்ததில் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் இருவா் தப்பி ஓடிய நிலையில் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளாா்.

 விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் 1, கைக்குண்டு 1, டிமோட் கொன்ரோல் 4, T56 ரவுன்ஸ் 98, விடுதலைப்புலிகளின் சீருடை 2, விடுதலைப்புலிகளின் புலிக்கொடி 40-45 என்பவற்றுடன் , முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கைது.

அதில் பயணித்த இருவர் தப்பி ஓட்டம். கைதானவர் கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்தவர் எனவும் தப்பி ஓடிய ஒருவர் சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அறியமுடிகிறது

குறித்த சம்பவம் இன்று காலை ஆறுமணியளவில் வீதியில் சென்ற முச்சக்கர வண்டியை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்த போதே இச் கிளைமோர் மீட்டப்பட்டுள்ளது

இருப்பினும் மேலதிக தகவல்கள் எதனையும் ஒட்டிசுட்டான் பொலிசாரிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியவில்லை நிலையைப் பொறுப்பதிகாரியை தொடர்புகொண்டு வினவிய பொழுது விசாரணைகள் நடப்பதனால் எதனையும் கூறமுடியாது 

எனவும் தகவல்களை பொலிஸ் ஊடகப்பிரிவிடம் எடுக்குமாறும் தெரிவித்தார். மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்க விசேட அதிரடிப்படை ஒரு குழு அமைத்து தேடதலில் இடுபட்டு வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு