குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

ஆசிரியர் - Editor I
குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

குளத்திலிருந்து ஆண் ஒருவருடைய சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. 

வவுனியா - குடியிருப்பு குளத்திலிருந்தே இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. குளத்தில் சடலமொன்று மிதப்பதாக 

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் 

சடலமாக காணப்படுபவர் தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

வவுனியா நகரில் யாசகத்தில் ஈடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமையுடன் தடவியல் பொலிஸார் 

மற்றும் நீதவானின் விசாரணைகளுக்காக சடலம் குளத்தின் கரைப்பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு