முதலிரவு நடக்காததால் மனைவியை கொன்ற கணவன்

ஆசிரியர் - Editor II
முதலிரவு நடக்காததால் மனைவியை கொன்ற கணவன்

இந்தியாவின் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரில் பிரசாத் மற்றும் கிருஷ்ணவேனி உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவர்களின் மகன் தான் சரவணன்.

தெலுங்கானா மாநிலம் வனபர்த்தியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு. இவரது மனைவி ரமாதேவி. இவர்களது மகள் ருக்மணி.

இவர்கள் இருவருக்கும் கடந்த முதலாம் ஆம் திகதி திருமணம் நடந்தது. பின்னர் முதலிரவு நடக்க ஏற்பாடு செய்தும் அன்று இரவு நடக்கவில்லை. இரண்டு நாட்கள் கடந்தும் தாம்பத்தியத்தில் கணவன் ஈடுப்பாடவில்லை என ருக்மணி தனது தாயாரிடம் கூறியுள்ளார்.  

ருக்மணியின் பெற்றோர் தனது மகளுக்கு முதலிரவு நடக்காததை அயலில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் சரவணனிடம் ஏன் முதலிரவு நடக்கவில்லை. ஆண்மை இல்லையா என கேலி செய்தனர்.

மேலும் சரவணனை ஐதராபாத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை அழைத்துச் சென்று ஆண்மை பரிசோதனை செய்தனர். இதுகுறித்து தனது பெற்றோருக்கு சரவணன் தெரிவித்தார்.

மகனை அவமானப்படுத்தியதால் அவர்களை கொலை செய்ய மகனுடன் சேர்ந்து அவரது தந்தை திட்டத்தை தீட்டி தங்களுடைய வீட்டிற்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார்.

பின்னர் ருக்மணியை வீட்டின் மேல் மாடிக்கு அழைத்து சென்ற சரவணன், ருக்மணியை கத்தியால் தாக்கி துடிக்க துடிக்க கொன்றார்.

மேலும் வீட்டு அறையில் இருந்த ருக்மணியின் பெற்றோரை சரவணனின் தந்தை தாக்கியுள்ளார். ஆனால் ருக்மணியின் தந்தை மட்டும் தப்பி ஓடியுள்ளார்.

இதனைக் கண்ட கிராமவாசிகள் பொலிசாருக்கு தகவலை தெரிவித்தனர். பின்னர் பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து ருக்மணியின் தந்தையை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த பொலிசார் சரவணன் மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தொடர்ந்தும் கேள்விக்குள்ளாகும் நினைவு கூறும் உரிமை !

மேலும் சங்கதிக்கு